Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நீச்சல் குளத்தில் கலக்கலாக போஸ் கொடுத்த நடிகை கஸ்தூரி..வைரல் பிக்ஸ் !
சென்னை : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி.
Recommended Video
தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போது தனது மகனுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் உள்ள கவர்ச்சி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சத்தியமா இது பிளான் பண்ணாத லைவ்... இன்ஸ்டாகிராம் நேரலையில் நாளை மாலை 6 மணிக்கு !
ஆத்தா உன் கோயிலிலே
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
கமல்ஹாசனுடன் இணைந்து
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
அப்பாவி பெண்
ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.
ஆஸ்கர் வரை
படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டு நடிப்பிலும் அழகிலும் சிறந்து விளங்கிய கஸ்தூரிக்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுத்தது இந்தியன் திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் இவரும் இணைந்து உலகமே உற்று நோக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
பாகுபாடும் காட்டாமல்
இவ்வாறு பல வெற்றி படங்களில் நடித்து வந்த கஸ்தூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு குத்து விளக்கு என்ற பாடலின் மூலம் மீண்டும் வந்து கவர்ச்சியில் கலை கட்டி ரசிகர்களை குதூகலிக்க வைத்தார். இவ்வாறு நடிப்பிலும் கவர்ச்சியிலும் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் அனைவரையும் வசீகரித்து வந்த கஸ்தூரி இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர்.
நீச்சல்குளத்தில் கவர்ச்சி
கஸ்தூரி தொடர்ந்து தனது படங்களையும் தன்னைப் பற்றிய செய்திகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பழக்கத்தை கொண்ட கஸ்தூரி தற்பொழுது நீச்சல்குளத்தில் கவர்ச்சி காட்டியவாறு உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கோடை வெயிலுக்கு இதமாக குளுகுளுவென நீச்சல் குளத்தில் தனது மகனுடன் நீச்சல் உடையில் முன்னழகு கவர்ச்சி காட்டியவாறு சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு எடுத்த போட்டோக்களை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விரைவிலேயே பிகினி
இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த கஸ்தூரியின் தீவிர ரசிகர்கள் இதை பார்த்து ரசித்தவாறு, எப்பொழுது உங்களை பிகினி உடையில் பார்க்கலாம், என பலரும் கேட்டதற்கு, கூடிய விரைவிலேயே பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை பதிவிடுகிறேன் என கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.