Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அய்யோ சாமி ஆளை வுடு.. பிக்பாஸின் நேற்றைய எபிசோடை பார்த்து தெறித்து ஓடும் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்து ஆளை விடுங்கசாமி நான் வரவில்லை என்று கும்பிடு போட்டு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடு பரபரப்பை கிளப்பி பார்வையாளர்களை பதற வைத்து விட்டது. காரணம் மீரா மிதுன், இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டார் என்றதால்.
சேரன் மீதான மீரா மிதுனின் குற்றச்சாட்டுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அடிக்கடி தனது விமர்சனங்களை கூறி வரும் கஸ்தூரியும் நேற்றைய எபிசோடு குறித்து கருத்து கூறியுள்ளார்.
வைல்டுகார்டில்
ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. நடிகை கஸ்தூரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்டுகார்டில் பங்கேற்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இப்போதுதான் பார்க்கிறேன்
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பார்க்கும் போது சுத்தமாக தாங்க முடியவில்லை என நேற்றைய எபிசோடில் மீரா குற்றச்சாட்டால் சேரன் கதறியதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை மூன்று வருடங்களாக பிக்பாஸில் பங்கேற்குமாறு அழைப்பதால் இந்த ஆண்டு பங்கேற்கலாம் என்ற தற்போதுதான் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்.
|
ஐயோ சாமி ஆளைவுடு
நேற்றைய எபிசோடை பார்த்த பிறகு, ஐயோ சாமி ஆளைவுடு என்ற எண்ணம் தான் வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் மாட்டிக்கிட்டு அவஸ்தைபடுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ என்று சேரனின் நிலைமை குறித்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
யாருக்குதான் அச்சமிருக்காது
நேற்றைய எபிசோடை பார்த்த பல பிரபலங்களும் அதிர்ந்துதான் போயிருப்பார்கள். சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் நல்ல மனிதர், நல்ல படைப்பாளி, கல்யாண வயதில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பனாக உள்ள ஒருவர் மீது இப்படி அபாண்டமாக பழி சுமத்தினால் யாருக்கு தான் அச்சமிருக்காது.