twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோவுக்காக… வியாபாரத்திற்காக படம் எடுக்காதீங்க… கஸ்தூரி சொன்ன சூப்பர் விஷயம்!

    |

    சென்னை : ஹீரோவுக்காகவும் மற்றும் வியாபாரத்திற்காகவும் படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று நடிகை கஸ்தூரி சூப்பரான ததகவலை கூறியுள்ளார்.

    ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார்.

    இவர் தமிழ்,இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரிக்கு சர்ச்சை நாயகி என்ற மற்றொரு செல்லப் பெயரும் உண்டு. நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என சகல டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்து விடுவார்.

    ரொம்ப பிஸி

    ரொம்ப பிஸி

    அனைத்து விவாத நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்துக் கொள்வார். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அப்பேட்டுகளுடன் சோஷியல் மீடியாவில் துணிச்சலுடன் சொல்லக்கூடிய ஒரே நடிகை கஸ்தூரி தான். இதனால் இணையத்தில் எப்போதும் பிஸியாகே இருக்கிறார் இவர்.

    மக்கள் பாக்குறமாதிரி

    மக்கள் பாக்குறமாதிரி

    நடிகை கஸ்தூரி, இணையத்தில் மிகவும் பேசு பொருளாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் அந்த படத்தை 4 முறை பார்த்தேன். ஆனால், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மக்கள் பார்க்குற மாதிரி படம் எடுங்க வேண்டும் என்றார்.நடிகை கஸ்தூரி, இணையத்தில் மிகவும் பேசு பொருளாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் அந்த படத்தை 4 முறை பார்த்தேன். ஆனால், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மக்கள் பார்க்குற மாதிரி படம் எடுக்க வேண்டும் என்றார்.

    Recommended Video

    Beast | Vijayயின் தந்தை S.A.Chandrasekarரின் Open talk | அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
    கண்டன்டுங்கள் இல்லை

    கண்டன்டுங்கள் இல்லை

    ஹீரோ மற்றும் வியாபார யுக்திகளை மனத்தில் வைத்துக்கொண்டு படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரித்து விடுவார்கள். ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் பொதுமக்களுக்காகவும் படம் எடுக்கவேண்டும். கன்னடம், தெலுங்கு, மலையாள படங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழகத்தில் சக்கை போடு போடுகின்றன. தமிழ் சினிமாவில் உலக கண்டன்டுக்கு இணையான கதை இருந்தால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும், தமிழ் சினிமா பொற்காலம் திரும்பி வரவேண்டும் என்றார்.

    English summary
    actress Kasturi said good ideas to cinema, ஹீரோவுக்காகவும் மற்றும் வியாபாரத்திற்காகவும் படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று நடிகை கஸ்தூரி சூப்பரான ததகவலை கூறியுள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X