அரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது.
இந்த விழாவில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், இயக்குனர் அட்லீ, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசியல்
இந்த நிலையில் இந்த விழாவில் விஜயின் அரசியல் பேச்சு பெரிய வைரலாகி உள்ளது. இருக்க வேண்டியவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும். சரியானவர்களை சரியான இடத்தில் அமர வைக்க வேண்டும், என்று அரசியல் கட்சிகளை சீண்டி விஜய் பேசி உள்ளார்.

செம வைரல்
அவரின் இந்த பேச்சு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதேபோல் அவரின் பேச்சு சில அரசியல் கட்சிகளையும் சீண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவில் இருந்தே விஜய் பேச்சுதான் இணையம் முழுக்க வைரலாக உள்ளது.

கஸ்தூரி என்ன
இந்த நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். அதில், விஜய் நல்ல நேர்மறையாக பேசி இருக்கிறார்.. அரசியலை தொட்டுள்ளார், பேனர் மூலம் நடக்கும் மரணங்களை சீண்டி உள்ளார். சுபஸ்ரீ குறித்து மிகவும் நேர்மையாக பேசி உள்ளார்.
சூப்பர் பாஸ்
அதேபோல் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசியுள்ளார். விஜயை கலாய்ப்பதை நிறுத்துங்கள். நடிகர் விஜய் தனது ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் திறமையாக பயன்படுத்தி உள்ளார், என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











