Don't Miss!
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி !
சென்னை : பெரியம்மை ,போலியோ, காலரா போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் இதை போல கொரோனாவையும் வென்று காட்டுவோம் என்று நடிகர் கஸ்தூரி கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . தற்போது கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில் மக்கள் எதை செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை வீடியோ பதிவாக பகிர்ந்து இருக்கிறார்.
இதில் கஸ்தூரி கொரோனா தொற்று காரணமாக வீட்டிலே இருக்க வேண்டிய சூழல் நமக்கெல்லாம் இருக்கிறது. இப்போது அனைவரின் வீட்டிலும் இணையம் இருக்கிறது இதனால் அவரவர்கள் தங்களின் வீட்டிலே இருந்தபடி இணையத்தில் உடற்பயிற்சிகளை கற்று வீட்டில் இருந்தபடியே உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் இந்த காலத்தில் சரியான உடற்பயிற்சி இல்லாமல் தான் நமது உடம்பிற்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகிறது. அந்த காலத்தில் உணவு செய்யும் முறையிலேயே உடற்பயிற்சி இருந்தது அதுதான் நம்மை சரியான உடற்கூரோடு வைத்து இருந்தது.
அந்த காலத்தில் ஊர் மற்றும் கிராமங்களில் திருவிழாக்கள் வரும்போது ஊர் முழுதும் மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டி வைப்பார்கள். அதனுடன் காப்பு என்று ஒன்று கட்டுவார்கள் அப்படி காப்பு கட்டி விட்டால் யாரும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் யாரும் உள்ளேயும் வர மாட்டார்கள். அது போல சாமிக்கு காப்பு கட்டியதாக நினைத்து ஊரடங்கை மதித்து வீட்டில் இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் கஸ்தூரி .
முன்னெச்சரிக்கையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் சிறிது காய்ச்சல் இருந்தாலும் கூட நாம் சோதித்து விட வேண்டும். கொரோனா தொற்று மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இருந்தும் இந்த நேரத்தில் நாம் சுத்தமாக இருப்பது நம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மஞ்சள் தண்ணீர் அல்லது கிருமிநாசினி எது வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் .
இறுதியாக நாம் அனைவரும் பெரியம்மை ,போலியோ, காலாரா மற்றும் ஸ்பேனிஸ் காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் நமக்கு இது சர்வ சாதாரணமான விஷயம். இதை நாம் கட்டாயம் வென்று காட்டுவோம். நம் நாட்டில் பெரியம்மை மற்றும் போலியோ என்பது அறவே கிடையாது அதை போல இதையும் துடைத்தெறிவோம் என்று ஊக்கமளித்திருக்கிறார்.
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!
-
அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?