Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெரியம்மை, போலியோவை வென்றுவிட்டோம்.. கொரோனாவையும் வெல்வோம்.. நடிகை கஸ்தூரி !
சென்னை : பெரியம்மை ,போலியோ, காலரா போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் இதை போல கொரோனாவையும் வென்று காட்டுவோம் என்று நடிகர் கஸ்தூரி கூறியுள்ளார்.
Recommended Video
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் . தற்போது கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில் மக்கள் எதை செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை வீடியோ பதிவாக பகிர்ந்து இருக்கிறார்.
இதில் கஸ்தூரி கொரோனா தொற்று காரணமாக வீட்டிலே இருக்க வேண்டிய சூழல் நமக்கெல்லாம் இருக்கிறது. இப்போது அனைவரின் வீட்டிலும் இணையம் இருக்கிறது இதனால் அவரவர்கள் தங்களின் வீட்டிலே இருந்தபடி இணையத்தில் உடற்பயிற்சிகளை கற்று வீட்டில் இருந்தபடியே உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் இந்த காலத்தில் சரியான உடற்பயிற்சி இல்லாமல் தான் நமது உடம்பிற்கு எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகிறது. அந்த காலத்தில் உணவு செய்யும் முறையிலேயே உடற்பயிற்சி இருந்தது அதுதான் நம்மை சரியான உடற்கூரோடு வைத்து இருந்தது.
அந்த காலத்தில் ஊர் மற்றும் கிராமங்களில் திருவிழாக்கள் வரும்போது ஊர் முழுதும் மஞ்சள் தெளித்து வேப்பிலை கட்டி வைப்பார்கள். அதனுடன் காப்பு என்று ஒன்று கட்டுவார்கள் அப்படி காப்பு கட்டி விட்டால் யாரும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் யாரும் உள்ளேயும் வர மாட்டார்கள். அது போல சாமிக்கு காப்பு கட்டியதாக நினைத்து ஊரடங்கை மதித்து வீட்டில் இருங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் கஸ்தூரி .
முன்னெச்சரிக்கையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் சிறிது காய்ச்சல் இருந்தாலும் கூட நாம் சோதித்து விட வேண்டும். கொரோனா தொற்று மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இருந்தும் இந்த நேரத்தில் நாம் சுத்தமாக இருப்பது நம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்று கூறியுள்ளார். மேலும் மஞ்சள் தண்ணீர் அல்லது கிருமிநாசினி எது வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் .
இறுதியாக நாம் அனைவரும் பெரியம்மை ,போலியோ, காலாரா மற்றும் ஸ்பேனிஸ் காய்ச்சல் போன்றவற்றை எதிர்த்து போராடி வென்றிருக்கிறோம் நமக்கு இது சர்வ சாதாரணமான விஷயம். இதை நாம் கட்டாயம் வென்று காட்டுவோம். நம் நாட்டில் பெரியம்மை மற்றும் போலியோ என்பது அறவே கிடையாது அதை போல இதையும் துடைத்தெறிவோம் என்று ஊக்கமளித்திருக்கிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்