Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருமணச் செய்தியை மறுத்த நடிகை கௌசல்யாவின் புதிய முடிவு!
சென்னை : நடிகை கௌசல்யா 90-களில் முன்னணி ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர். 38 வயதான அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல் வதந்தி என மறுத்தார் கௌசல்யா.
இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை எனவும் கூறியிருந்தார் கௌசல்யா. இந்நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'உத்ரா' எனும் பக்தி படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார் கௌசல்யா.
கௌசல்யா ஏற்கெனவே, 'ராஜகாளி அம்மன்', 'தாலி காத்த காளியம்மன்' உள்ளிட்ட பக்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் கௌசல்யா 'உத்ரா' பக்தி படத்தில் நடிக்கிறார். 'உச்சகட்டம்', 'நெல்லை சந்திப்பு' ஆகிய படங்களை இயக்கிய நவீன் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.
'உத்ரா' படத்தில் விஸ்வா, விவாந்த், ரக்ஷா, ரோஷினி, சினேகா நாயர் ஆகிய புதுமுகங்கள் நடித்திருக்கிறர்கள். ஆர்.கே.டிஜிட்டல் மீடியா சார்பில் ராஜ்குமார் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
உத்ரா எனும் பெண்ணையும், அவளது காதலனையும் கொன்ற வில்லனை, உத்ரா ஆவியாக வந்து பலிவாங்குவது தான் கதை. இதற்கிடையே உத்ராவின் சாபத்தால் கிராமத்தில் நடக்கும் கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய கல்லூரி மாணவர்கள் அங்கு செல்கிறார்கள். இந்தக் கதையில் தான் அம்மனாக கௌசல்யா நடிக்கிறார்.