Don't Miss!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ப்பா.. என்னா மனசு.. என் வாழ்க்கையில் உங்களைவிட சிறந்தது எதுவுமில்லை.. உருகிய கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பக்கம் பக்கமாய் உருகியிருக்கும் பதிவு பலராலும் லைக் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், படங்களில் செம பிஸியாக உள்ளார்.
அரண்மனை 3ம் பாகத்தில் ஆம்பள பேய்.. காஞ்சனா லாரன்ஸுக்கு டஃப் கொடுக்க சுந்தர்.சியின் மாஸ்டர் பிளான்!
குடும்பத்துடன் கொண்டாட்டம்
அண்மையில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். பாரம்பரிய சேலையில் தனது செல்ல பிராணிகளுடனும் குடும்பத்தினருடனும் எடுத்த அசத்தல் போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இவ்வளவு பெரிய குடும்பம்
அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்ததோடு மறு பக்கம் அவரது குடும்பத்தை பார்த்தும் வாய் பிளந்தனர். அம்மா, அப்பா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி, தங்கை என 13 பேர் உள்ளதை பார்த்த ரசிகர் இவ்வளவு பெரிய குடும்பமா என ஆச்சரியப்பட்டனர்.
நைக் பிறந்தநாள்
கீர்த்தி சுரேஷின் ஓணம் செலிபிரேஷன் போட்டோக்கள் இன்னமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷின் செல்ல நாயான நைக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த பதிவை ஷேர் செய்துள்ளார்.
2 ஆண்டுகள் ஆகிவிட்டன..
அதில் பக்கம் பக்கமாக நைக் குறித்தும் அது, தனது வாழ்க்கையில் எந்தளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பது குறித்தும் உருக்கமாக எழுதியிருக்கிறார். எல்லா செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு குறிப்பை அவர் எழுதியிருக்கிறார். அதாவது, "இந்தச் சிறுவன் எங்கள் குடும்பத்திற்குள் நுழைந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன...
நினைவில் வைத்திருப்பேன்
உன்னை விட்டு செல்ல முடியாமல் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நேரங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் இன்றையதைப் போலவே, ஒருவரின் வாழ்க்கையில் நீங்கள் உடனடியாக ஒரு விளையாட்டு மாற்றியாக மாறலாம். இதுதான் நீங்கள் செய்த வித்தியாசம்.
யோசிக்க முடியாது
நான் கீழே இருந்தபோதும், டல்லாக இருந்தபோதும், நீங்கள் நக்கும்போது நான் எப்படி உணர்ந்தேன் என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களை விட என்னை நன்றாக உணரக்கூடிய எதையும் நான் யோசிக்க முடியாது! நீங்கள் ஒரு ஆச்சரியமாக வந்தீர்கள், நீங்கள் எங்களிடம் கொண்டு வரும் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மூட்டைகளுடன் எங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறீர்கள்!
மெல்லியவர்
நீங்கள் ஒரு கவர்ச்சியானவர், மெல்லியவர், மன்னிப்புக் கேட்கக்கூடியவராகவும், மிகத் தெளிவாக அதனை உங்களால் வெளிப்படுத்தவும் முடியும்! நான் வேலைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு எளிய பை சொல்வதை நான் மிகவும் கடினமாகக் கொண்டிருந்தேன், நீங்கள் வராதபோதும் கூட நீங்கள் காரில் குதித்தீர்கள்! நீங்கள் சந்திக்கும் எவரையும் பற்றி வயிற்றை தடவும் போது நீங்கள் தட்டையாகப் போவதைப் பார்ப்பது மகிழ்ச்சி!
குவியும் லைக்ஸ்
உங்கள் தாயிடமிருந்து ...
உனக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் நைக் பேபி! என பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த நெகிழ்ச்சியான பதிவை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நைக்குடன் இருக்கும் போட்டோவையும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.