Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சீக்கிரமா போயிட்டியே சித்ரா.. நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்.. ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
சென்னை: பிரபல விஜே மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த விஜே சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது கோலிவுட்டை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சின்னத்திரை நடிகர்களை தாண்டி வெள்ளித்திரை நடிகர்களும் சித்ராவின் இந்த திடீர் மரணத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீக்கிரமா போயிட்டியே சித்ரா என தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
விஜே சித்ராவாக மக்கள் டிவி, வேந்தர் டிவி, விஜய் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் பணியாற்றிய சித்ரா, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சித்ரா இறந்து விட்டார் என்பதை விட முல்லை போயிட்டாரே என்கிற கவலை தான் பலருக்கும் அதிகம்.
சந்தேகம் கிளப்பும் சக நடிகைகள்
விஜே சித்ரா நல்ல போல்டான, திறமையான பெண் என்றும் பணி நெருக்கடி காரணமாகவோ பர்சனல் விஷயம் காரணமாகவோ இப்படி தூக்கிட்டுக் கொள்ள மாட்டார். தற்கொலைக்கு எதிராக பேசி வந்தவர் எப்படி தற்கொலையை செய்துக் கொண்டார் என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருக்கக்கூடும் என சக நடிகைகளும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
விசாரணை வலையில் ஹேமந்த்
ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த ஹேமந்த் ரவி எனும் தொழிலதிபருடன் சித்ராவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. சம்பவம் நடந்த நேரத்திலும், அந்த தனியார் ஹோட்டலில் ஹேமந்த் உடன் தான் சித்ரா தங்கி இருந்தார். ஆனால், அவரை வெளியே போக சொல்லிவிட்டு குளிக்க செல்வதாக கூறிய சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், விசாரணை வலையில் ஹேமந்த் சிக்கி உள்ளார்.
பிரபலங்கள் இரங்கல்
சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் ஒட்டுமொத்த சின்னத்திரை கலைஞர்களையும் திடுக்கிட செய்துள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், ஹேமா சதீஷ், ரேகா, சாந்தனு, ஆத்மிகா, சாக்ஷி அகர்வால் என சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சியுற்று இரங்கல் பதிவுகளை வெளியிட்டனர்.
சீக்கிரம் போயிட்டியே சித்ரா
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் சீக்கிரம் போயிட்டியே சித்ரா (Gone too soon. #RIPChitra) என பதிவிட்டு, சித்ராவின் அழகான போட்டோவையும் ஷேர் செய்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கண்ணீர் அஞ்சலி
நடிகை கீர்த்தி சுரேஷின் இரங்கல் பதிவை பார்த்ததும், கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜே சித்துவின் ரசிகர்கள் ஏகப்பட்ட இரங்கல் கமெண்ட்டுகளையும், கண்ணீர் அஞ்சலிகளையும் செலுத்தி வருகின்றனர். விஜே சித்துவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மற்றும் போலீஸ் விசாரணை என்ன சொல்ல போகிறது என்பதையும் எதிர்நோக்கி வருகின்றனர் ரசிகர்கள்.