Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தன்னை தத்ரூபமாய் வரைந்த ஃபேன்ஸ்.. உலக ஓவிய தினத்தில் மொத்தமாய் வெளியிட்டு நன்றி கூறிய பிரபல நடிகை!
சென்னை: தன்னை தத்ரூபமாய் வரைந்து அனுப்பிய ரசிகர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி கூறியுள்ளார்.
உலக ஓவிய தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதியான நேற்றும் உலக ஓவிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தன்னை ஓவியமாக வரைந்து அனுப்பிய ரசிகர்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நன்றி கூறியுள்ளார்.
இதயத்தை வென்றார்கள்
மேலும் இதுவரை தனக்கு அனுப்பப்பட்ட ஓவியங்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அந்த வீடியோவில் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் கலை தினத்தை உருவாக்குகிறார்கள் என்றும் அவர்கள் தங்கள் கலையால் தன்னுடைய இதயத்தை வென்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது என்ன மாயம்
பலவற்றில் இது சில மட்டுமே.. உங்களின் அன்புக்கு நன்றி.. என பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நன்றி கூறி வருகின்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ரஜினியுடன் அண்ணாத்த
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் படத்திலும் நடித்து வருகிறார்.
Recommended Video
க்ரைம் த்ரில்லர்
சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாணிக் காயிதம் திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாகும். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.