Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
வாரிசு படத்தில் நான் நடிக்கிறேனா.. இது என்ன புதுக்கதையா இருக்கு.. குஷ்பூ பளீச்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எண்ணூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விஜய் -ராஷ்மிகா மந்தனா பங்குபெறும் டூயட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
படத்தில் பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. பொங்கலையொட்டி படம் ரிலீசாகவுள்ளது.
முதல்ல பைட்டு.. அப்புறம்தான் டூயட்.. வாரிசு படத்தில் விஜய்யின் மாஸ்டர் பிளான்!
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் சண்டைக் காட்சிகள் எண்ணூரில் நடத்தப்பட்டு வருகின்றன.
விரைவில் டூயட் சூட்டிங்
இதையடுத்து படத்தின் டூயட் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ள இந்த டூயட் காட்சிகளில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
லீக்கான படத்தின் காட்சிகள்
முதலில் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், பின்பு பெப்சி தொழிலாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி சென்னையில் நடத்தப்பட்டு பின்பு மீண்டும் ஐதராபாத்திற்கே மாற்றப்பட்டது. இந்தப் படம் ஆரம்பம் முதலே காட்சிகள் மற்றும் வீடியோக்கள் லீக்காகும் பிரச்சினையை சந்தித்து வந்தது.
சூட்டிங்கின்போது புகைப்படங்கள்
இந்தப்படத்தின் சூட்டிங்கின்போது பிரபு மற்றும் சரத்குமாருடன் இணைந்து நடிகை குஷ்பூ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பிரபு தோள் மீது சாய்ந்துக் கொண்டு குஷ்பூ எடுத்திருந்த இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. முன்னதாக விஜய்யுடன் இணைந்தும் குஷ்பூ புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
வாரிசு படத்தில் நடிக்கவில்லை
இந்தப் படத்தில் நடித்துவந்த குஷ்பூ இந்தப் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது தான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். வாரிசு படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்தபோது தான் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குப்பட சூட்டிங்
தான் பக்கத்து படப்பிடிப்பு தளத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வந்ததாகவும் அப்போதுதான் விஜய், சரத்குமார், பிரபுவை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். வாரிசு படத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.