குஷ்பு வீட்டு வாசலில் பூத்திருக்கும் பூ.. என்னப்பூ? நீங்களே பாருங்க..அது மட்டும் தான் மிஸ்ஸிங் மேடம்
சென்னை: நடிகை குஷ்பு தனது வீட்டில் போட்டுள்ள கோலத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். ஸ்டாலின், கனிமொழ மற்றும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு வெளியே வேண்டாம் சிஏஏ என கோலம் போடப்பட்டது.
டிவிட்டரில் ஷேரிங்
இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு வீட்டிற்கு வெளியேயும் சிஏஏவுக்கு எதிராக கோலம் போடப்பட்டுள்ளது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை குஷ்பு.
நடுவில் பூசணி
அந்த கோலத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த கோலத்திற்கு நடுவில் பூசணி பூ ஒன்றை வையுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
எப்போ வேணா போடலாம்
நெல்லை கண்ணன் பிரதமரை அமித்ஷா வை விமர்ச்சித்துக்கு தாங்கள் கருத்து கூறலாமே.. கோலம் எப்போ வேணா போட்டுக்கலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.
அது என்ன மலர்
அது என்ன மலர் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
கைது பயமோ..
கோலமே தாமரை மலர்ந்தது போல தான் உள்ளது. அது சரி முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு. நேற்று ஏன் கோலமிடவிலை. கோலமிட்டால் கைது செய்து விடுவார்கள் என்ற பயமா. யாரையும் கைது செய்யவில்லை அதனால் இன்று தைரியமாக கோலமோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஏன் மத நம்பிக்கை?
மேடம் கோலம் என்பது இந்துக்களின் கலாச்சார வழிபாடு.. நாத்திகம் பேசுற உங்களுக்கு ஏன் திடீர்னு இந்த மத நம்பிக்கை.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











