Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்
சென்னை: பிரபல நடிகை குஷ்புவுக்கு ஒருவர் பாலியன் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல நடிகை குஷ்பு, 90 களில் டாப் ஹீரோயினாக இருந்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அவர், பின்னர் அரசியலுக்கு வந்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவிட்டு ஆச்சர்யப்படுத்தினார்.
தாடியும் மீசையும் தாராளமா வளர்க்குறாங்களே.. விஜய் முதல் சந்தானம் வரை.. லாக்டவுன் தந்த மாற்றம்!
யோகா ஆசனங்கள்
மேலும் மிகவும் கடினமான யோகா ஆசனங்களை வியக்கும் வகையில் செய்து அந்தப் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு. அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சில விஷயங்களில் அவர் கருத்து சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
ராகுலிடம் மன்னிப்பு
சமீபத்தில் கூட புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து அவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு விளக்கம் அளித்தார் குஷ்பு. அதில், புதிய கல்விக் கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையையே பேசுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் அமித் ஷா
பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி வெளியானதும் பல்வேறு தலைவர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி டிவீட் செய்தனர். நடிகை குஷ்புவும் அமித் ஷா குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாக டிவீட் செய்திருந்தார். இதுவும் சர்ச்சையானது. சோசியல் மீடியாவில் நடிகை குஷ்புவை பலர் விமர்சித்தனர்.
பாலியல் வன்கொடுமை
அவர் பாஜகவில் சேரப் போவதாகக் கூறப்பட்டது. இதை நடிகை குஷ்பு மறுத்திருந்தார். இந்நிலையில், அவருக்கு ஒருவர், செல்போனில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வருவதாக பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்துள்ளார்.
கொல்கத்தா போலீஸ்
அதில் அவர், 'இந்த எண்ணில் இருந்து எனக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன. இவர் பெயர் சஞ்சய் சர்மா என்று வருகிறது. இது கொல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் அழைப்பு. இதுபற்றி கொல்கத்தா போலீஸ், விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொல்கத்தா போலீசுக்கும் அந்த ட்வீட்டை டேக் செய்துள்ளார்.
Recommended Video
முதல்வர் மம்தா பானர்ஜி
இதையடுத்து நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு பதிவில், கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி இதுபற்றி கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கே இப்படி என்றால் மற்றப் பெண்களின் நிலையை எண்ணி பாருங்கள் என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார். இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவியுங்கள் என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.