Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தால் தான் நடிப்பேன் என இயக்குநரிடம் சொன்னேன்..குஷ்பு சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : நடிகை குஷ்பு தனது பெயரின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் சுவாரசியமாக கூறியுள்ளார்.
கன்னம் ரெண்டும் நன்றாக உப்பி, பார்ப்பதற்கே ஜீராவில் ஊறிய குலாப்ஜாமுன் மாதிரி சும்மா கும்முனு இருப்பவர் குஷ்பு.
இவர் சமீபகாலமாக மிகுந்த உடற்பயிற்சி செய்து எடை குறைந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த போட்டோக்கள் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வருகின்றன.
20 வயது ஹீரோயின் போல மின்னும் உடையில் குஷ்பு.. இந்த லுக்குக்காக அவர் செய்தது என்ன!
குஷ்பு
கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப்பூ... நெஞ்சிலே என்னப்பூ குஷ்பு என்று, 90ஸ் கிட்ஸ்களை ஆட்டம் போடவைத்தவர் குஷ்பு. இவர் தமிழில் வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி 1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என இவர் நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
காதல் திருமணம்
1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டதால் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் குஷ்பு தொடர்ந்து நடித்து வருகிறார். சுந்தர்சி மற்றும் குஷ்பு தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
சகலகலா வல்லி
திருமணத்திற்கு பின்பு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினார். தற்போது தயாரிப்பு, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள், அரசியல் மற்றும் குடும்பம் என சகலத்தையும் சரியாக மெயின்டெயின் செய்து சகலகலா வல்லியாக இருக்கிறார் குஷ்பு.
செல்லப்பிள்ளை நான்
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள குஷ்பு, தான் சினிமாவில் எப்படி நுழைந்தேன் என்பதை கூறியுள்ளார். எனக்கு மூன்று அண்ணன்கள் நான் தான் வீட்டில் கடைகுட்டி. வீட்டில் செல்லப்பிள்ளை என்பதால் என் பேச்சுக்கு மறுபேச்சே இல்லை. நான் என்ன கேட்டாலும் அடுத்த நொடியே அதை என் அண்ணன்கள் வாங்கி கொடுத்துவிடுவார்கள்.
என் பெயர் நக்கத்
என் அண்ணனுக்கு ஹேமமாலினி குடும்பத்தில் நல்ல நட்பு உண்டு. இதனால், அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது தான் ஒரு நாள் தயாரிப்பாளர் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை பி.ஆர்.சோப்ரா ஆகியோர் வந்திருந்தார்கள். என்னை பார்த்தும் நடிப்பீயானு கேட்டாங்க, நடிக்கிறேன் ஆனால் எனக்கு ஐஸ்க்ரீம் வேண்டும் என்று கேட்டேன். அவங்க தான் நக்கத் என்ற பெயரை குஷ்பு என்று மாற்றினார்கள். நக்கத் என்ற பெயர் பெர்ஸிய மொழி சார்ந்ததாக இருந்ததால், அதை மாற்றி குஷ்பு என பெயர் வைத்தார்கள் என தனது பெயரின் ரகசியத்தை கூறினார்.