Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘பாபா‘வில் நான் நடிக்க வேண்டியது… நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்… வேதனைபட்ட பிரபல நடிகை!
சென்னை : 2002ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
முதல் படத்திலேயே தமிழ் நடிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
நல்ல பெயர்
பிரஷாந்துடன் வின்னர் படத்தில் பிரஷாந்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுடனும், வில்லன், பரசுராம், வாடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
குத்தாட்டம்
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பட வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து நடனம் ஆடினார். இவர், விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
வேதனைபட்ட நடிகை
இந்நிலையில், நடிகை கிரண் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார். பாபா படத்தில் மனிஷா கொய்ராலாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நான் அப்போது தான் ஜெமினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தேன். இதனால், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
Recommended Video
ஏராளமான ரசிகர்கள்
நடிகை கிரண் தற்போது பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார், இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை வசியம் செய்து விட்டார்.