ப்ளிஸ்.. திரும்ப வாங்க.. நடிகர் சுஷாந்துக்காக கண்ணீர்விட்டு அழுத நடிகை.. வைரலாகும் டிக்டாக் வீடியோ!
சென்னை: நடிகர் சுஷாந்துக்காக பிரபல நடிகையான கிரண் கண்ணீர் விட்டு அழுத டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மும்பை பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் சுஷாந்த்.

பிரபலங்கள் இரங்கல்
ஏராளமான இளம் ரசிகர்களை கொண்ட சுஷாந்த் தன்னுடைய 34 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி முதல் இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

8 பிரபலங்கள் மீது வழக்கு
அதேநேரத்தில் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சுஷாந்தின் தற்கொலைக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களாக கருதப்படும் சிலர் தான் என சாடி வருகின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுஷாந்துக்காக கண்ணீர்
இந்நிலையில் சுஷாந்துக்காக பிரபல நடிகையான கிரண் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு பக்கம் சுஷாந்த் சிரித்துக் கொண்டிருக்கும் பழைய வீடியோ பிளே ஆகி கொண்டிருக்கிறது.

ஆன்மா சாந்தியடையட்டும்
மற்றொரு பக்கம் கிரண், கண்ணீர்விட்டப்படி அழுது கொண்டிருக்கிறார். கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தப்படி அழுகிறார் கிரண். அவரது இந்த வீடியோவுக்கு ப்ளீஸ் திரும்ப வாங்க என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











