Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உங்களுக்கு ஒரு 15.. அவங்களுக்கு ஒரு 15.. கொரோனா தடுப்புக்காக 30 லட்சத்தை அள்ளிக் கொடுத்த நடிகை!
சென்னை: கொரோனா தடுப்புக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நடிகை லதா 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி உள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸால், இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்புக்காக மக்கள் உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மத்திய அரசுக்கும் அவரவர் மாநில அரசுக்கும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் பழம் பெரும் நடிகையான லதாவின் குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி, அவரது மனைவியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா குடும்பத்தினர் மத்திய அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் நிதி வழங்கியுள்ளனர். 15 லட்சத்திற்கான காசோலையை தலைமை செயலாலர் சண்முகத்திடம் நடிகை லதா வழங்கியுள்ளார்.