Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்களுக்கு ஒரு 15.. அவங்களுக்கு ஒரு 15.. கொரோனா தடுப்புக்காக 30 லட்சத்தை அள்ளிக் கொடுத்த நடிகை!
சென்னை: கொரோனா தடுப்புக்காக மத்திய மாநில அரசுகளுக்கு நடிகை லதா 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி உள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸால், இதுவரை 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் 2000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்புக்காக மக்கள் உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மத்திய அரசுக்கும் அவரவர் மாநில அரசுக்கும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் பழம் பெரும் நடிகையான லதாவின் குடும்பத்தினர் சார்பில் அவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி, அவரது மனைவியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா குடும்பத்தினர் மத்திய அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் தமிழக அரசுக்கு 15 லட்சம் ரூபாயும் நிதி வழங்கியுள்ளனர். 15 லட்சத்திற்கான காசோலையை தலைமை செயலாலர் சண்முகத்திடம் நடிகை லதா வழங்கியுள்ளார்.