Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Exclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்!
தோனி கபடிக்குழு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகை லீமா.
Recommended Video
சென்னை: படையப்பா நீலாம்பரியை போன்ற ஒரு வேடத்தில் நடிப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் எனக் கூறுகிறார் நடிகை லீமா.
மதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவருக்கு தற்போது ஹீரோயின் அந்தஸ்து கிடைத்துள்ளது.
தோனி கபடிக்குழு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் லீமா. படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன்.
ஆர்யா தங்கை
"மதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த எனக்கு இப்போது ஹீரோயின் புரோமோஷன் கிடைத்துள்ளது. தோனி கபடிக்குழு ஒரு வித்தியாசமான படம். கிரிக்கெட்டும் இருக்கும் கபடியும் இருக்கும். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
நல்ல கதாபாத்திரம்
பொதுவாக படங்களில் வரும் பப்ளி க்யூட் ஹீரோயினாக மட்டுமில்லாமல், ஒரு பொறுப்பான தைரியமான நாயகி பாத்திரம் எனக்கு. படம் நன்றாக வந்துள்ளது. பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கிறது. எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
நரை படத்திலும்...
தோனி கபடிக்குழு படத்தை அடுத்து, நரை எனும் படத்தில் நடித்துள்ளேன். அதுவும் ஒரு வித்தியாசமான படம். முதியவர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள. அதிலும் எனக்கு அழகான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
வரலட்சுமி தான் ரோல்மாடல்
எனக்கு ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வரலட்சுமி தான் என் ரோல் மாடல். அவரை போல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
வில்லியாக நடிக்க ஆசை
வில்லியாகக்கூட நடிக்க நான் தயாராக இருக்கிறேன். படையப்பாக நீலாம்பரி கதாபாத்திரம் தான் எனது லட்சிய வேடம். ஆனால் எனது முகம் அதுக்கு செட்டாகாது என சொல்லிவிட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்தாவது அதுக்கு நான் செட்டாவேனா என பார்க்க வேண்டும். நிச்சயம் அது மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
சினிமாவை விட்டுத்தர மாட்டேன்
நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாக்குள் வந்தவள். இங்கிருக்கும் ஒரு சிலரால் தான் காஸ்டிங் கவுச் போன்ற விஷயங்கள் நடக்கிறது. அவர்களை வைத்து ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சொல்லக்கூடாது. நான் என்றுமே சினிமாவை விட்டுத்தர மாட்டேன்", என உறுதியாக கூறுகிறார் லீமா.