Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு எதுவும் தெரியாது... சுகாஷ் என்னை மோசடி செய்துவிட்டான்! - நடிகை லீனா மரியா
அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த இவன் தனது 19 வயதில் மோசடியை ஆரம்பித்தான். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல கோடியை மோசடி செய்துள்ளான்.
சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் புகார் அளித்த பின்னர்தான் சுகாஷ், சென்னையில் பதுங்கி இருந்து மோசடி செய்வது அம்பலமானது. சுகாஷை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான்.
லீனாவை ரயிலில் சென்னை கொண்டு வந்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, "அவனை பெரிய இயக்குநர், சினிமாவில் செல்வாக்கு மிக்கவன் என்று நம்பி நான் ஏமாந்து போனேன். என்னிடம் அறிமுகமானபோது, பெரிய டைரக்டர் என்று கூறினான். முன்னணி நடிகையாக்குவதாக கூறினான். அதனால் அவன் காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன்," என்று போலீசிடம் தெரிவித்துள்ளார்.
எனவே லீனாவை வைத்தே தலைமறைவாக உள்ள சுகாஷை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சுகாஷைப் பிடிக்க 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
பெங்களூரில் மட்டும் சுகாஷ் மீது 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன.
சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே