Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற சங்கங்கள் போராட வேண்டும் - நடிகை மதுமிதா
சென்னை : நடிகை மதுமிதாவை நமக்கெல்லாம் ஜாங்கிரி மதுமிதாவாகவே தெரியும். இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் . இவரை பலரிடம் கொண்டு போய் சேர்த்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி அதனாலே அந்த படத்தில் சந்தானம் பேசும் ஒரு வசனம் மூலம் இவருக்கு ஜாங்கிரி மதுமிதா எனும் அடைமொழி பெயர் வந்தது.
நேற்று நடந்த ஞான செருக்கு எனும் பட்ஜெட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜாங்கிரி மதுமிதா, சிறிய பட்ஜெட் படங்கள் வருடத்திற்கு தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகுகிறது. இருந்தும் எந்த படமும் பெரிய பட்ஜெட் படங்களின் அளவில் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை என்று வருத்தம் தெரிவித்தார் .
மேலும் நமக்கு இதை பற்றிய பொறுப்பு வேண்டும் என்று கூறினார் .கடந்த வருடத்தில் வெளியான நெடுநல்வாடை, ஒத்த செருப்பு மற்றும் சில்லுகருபட்டி போன்ற படங்கள் சிறிய பட்ஜெட்டாக இருந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது . இருந்தும் வியாபார ரீதியாக அவை பெரிய சாதனைகளை செய்யவில்லை என்பது வருத்தம் என கூறினார் .
மேலும் தமிழக அரசு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் .இந்த மாதிரி சிறு பட்ஜெட் படங்களை நாமும் வரவேற்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் மதுமிதா.
மதுமிதா பிக்பாஸ்க்கு பிறகு கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இதுவாகும் .பிக்பாஸில் மதுமிதாவுக்கு பல பிரச்சனைகள் நடந்தேறியதாக வீட்டை விட்டு தன் கையை தானே அறுத்து பாதியில் வந்ததாக பலரும் பல விதத்தில் பேசி பல குழப்பங்கள் ஏற்பட்டு பல தடவை மதுமிதா மைக் பிடித்து மீடியாவிடம் பேசி இப்பொழுது தான் ஒரு வழியாக அந்த பிக் பாஸ் அலை ஓய்ந்து உள்ளது .
அதே நேரத்தில் பிக்பாஸ் சென்றதால் மதுமிதாவின் பெயரும் கெட்டுவிட்டது என பலரும் கருத்து தெரிவித்தனர் . எது எப்படியோ மது சினிமாவில் மீண்டும் பட்டய கெளப்ப வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும்