Just In
- 1 min ago
'ரஜினி பேசிய அந்த வசனம்.. சினிமாவுக்கு வந்த பலனை அடைந்தேன்'.. பா.ராஞ்சித் உருக்கமான பேச்சு!
- 7 min ago
செல்லாது செல்லாது... பேஸ்புக்ல மன்னிப்புக் கேட்டா எப்படி? இளம் ஹீரோவுக்கு செக்!
- 14 min ago
அட்லீன்னாங்க... அவருன்னாங்க... இப்ப மலையாள இயக்குனரை டிக் செய்த ஷாரூக் கான்.
- 16 min ago
தலைவி, குயினுக்கு தடையில்லை.. "இது கற்பனை கதை" என அறிவிப்பு விட வேண்டும்: ஹைகோர்ட்
Don't Miss!
- Sports
கடைசி 3 மேட்ச் போச்சு.. இந்த மேட்ச்சில் ஜெயிச்சே ஆகணும்.. சென்னை அணியை சந்திக்கும் நார்த் ஈஸ்ட்!
- News
தாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு காரை உதைத்த சிறுவன் .. வைரல் வீடியோ
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Lifestyle
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..!
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“எனது கணவரை விட்டு விடு என நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்”.. நடிகை ஜெயஸ்ரீ கண்ணீர் பேட்டி!
சென்னை: தனது கணவர் ஈஸ்வரை விட்டு விலகி விடும்படி நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர் மனமிறங்கவில்லை என்றும் நடிகை ஜெயஸ்ரீ வேதனை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி ஜெயஸ்ரீயும். சமீபகாலமாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ஜெயஸ்ரீ, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்வர் மீது போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகாரில் அவர் ஈஸ்வரின் நடத்தை சரியில்லை எனத் தெரிவித்திருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
"போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்.. தவறாக நடந்துகொண்டார்.." கணவர் மீது நடிகை பகீர் புகார்

ஜெயஸ்ரீ பேட்டி
இந்நிலையில் ஈஸ்வர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜெயஸ்ரீ. அதில் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மகாலட்சுமி தான் காரணம்
மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமானவர் தான். அவரது குழந்தை ஈஸ்வரை அப்பா என்று அழைப்பதாக ஜெயஸ்ரீ அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தான் ஒருமுறை மகாலட்சுமியை காரில் சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்
அப்போது தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக கூறியுள்ள ஜெயஸ்ரீ, தனது இந்த நிலைக்கு மகாலட்சுமியும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியுடன் தான் ஒன்றரை மணி நேரம் பேசியதை செல்போன் மூலம் ஒட்டுக்கேட்ட ஈஸ்வர், பின்னர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

ஈஸ்வரின் ஆசை
மேலும் ஈஸ்வரை தான் பெரிதும் நம்பியதாகவும், ஆனால் அவர் முன்பிருந்தே பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்பது தெரியவந்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மகாலட்சுமி ஈஸ்வரிடம் நட்பாக பழகுவதாகவே கூறி வருவதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய ஈஸ்வர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.