Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“எனது கணவரை விட்டு விடு என நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்”.. நடிகை ஜெயஸ்ரீ கண்ணீர் பேட்டி!
தனக்கும் தனது கணவர் ஈஸ்வருக்கும் பிரச்சினை ஏற்பட நடிகை மகாலட்சுமி தான் காரணம் என நடிகை ஜெயஸ்ரீ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது கணவர் ஈஸ்வரை விட்டு விலகி விடும்படி நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர் மனமிறங்கவில்லை என்றும் நடிகை ஜெயஸ்ரீ வேதனை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி ஜெயஸ்ரீயும். சமீபகாலமாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ஜெயஸ்ரீ, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்வர் மீது போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகாரில் அவர் ஈஸ்வரின் நடத்தை சரியில்லை எனத் தெரிவித்திருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
"போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்.. தவறாக நடந்துகொண்டார்.." கணவர் மீது நடிகை பகீர் புகார்
ஜெயஸ்ரீ பேட்டி
இந்நிலையில் ஈஸ்வர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜெயஸ்ரீ. அதில் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மகாலட்சுமி தான் காரணம்
மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமானவர் தான். அவரது குழந்தை ஈஸ்வரை அப்பா என்று அழைப்பதாக ஜெயஸ்ரீ அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தான் ஒருமுறை மகாலட்சுமியை காரில் சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்
அப்போது தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக கூறியுள்ள ஜெயஸ்ரீ, தனது இந்த நிலைக்கு மகாலட்சுமியும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியுடன் தான் ஒன்றரை மணி நேரம் பேசியதை செல்போன் மூலம் ஒட்டுக்கேட்ட ஈஸ்வர், பின்னர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஈஸ்வரின் ஆசை
மேலும் ஈஸ்வரை தான் பெரிதும் நம்பியதாகவும், ஆனால் அவர் முன்பிருந்தே பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்பது தெரியவந்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மகாலட்சுமி ஈஸ்வரிடம் நட்பாக பழகுவதாகவே கூறி வருவதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய ஈஸ்வர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.