Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
“எனது கணவரை விட்டு விடு என நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்”.. நடிகை ஜெயஸ்ரீ கண்ணீர் பேட்டி!
தனக்கும் தனது கணவர் ஈஸ்வருக்கும் பிரச்சினை ஏற்பட நடிகை மகாலட்சுமி தான் காரணம் என நடிகை ஜெயஸ்ரீ குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது கணவர் ஈஸ்வரை விட்டு விலகி விடும்படி நடிகை மகாலட்சுமியிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர் மனமிறங்கவில்லை என்றும் நடிகை ஜெயஸ்ரீ வேதனை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி ஜெயஸ்ரீயும். சமீபகாலமாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ஜெயஸ்ரீ, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈஸ்வர் மீது போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகாரில் அவர் ஈஸ்வரின் நடத்தை சரியில்லை எனத் தெரிவித்திருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
"போதையில் என் மகள் மீது சிறுநீர் கழித்தார்.. தவறாக நடந்துகொண்டார்.." கணவர் மீது நடிகை பகீர் புகார்
ஜெயஸ்ரீ பேட்டி
இந்நிலையில் ஈஸ்வர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஜெயஸ்ரீ. அதில் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன்னை விவாகரத்து செய்ய, ஈஸ்வர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மகாலட்சுமி தான் காரணம்
மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணமானவர் தான். அவரது குழந்தை ஈஸ்வரை அப்பா என்று அழைப்பதாக ஜெயஸ்ரீ அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தான் ஒருமுறை மகாலட்சுமியை காரில் சந்தித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமியிடம் கெஞ்சினேன்
அப்போது தனது கணவரை விட்டுவிடும்படி காலில் விழாதக் குறையாக அழுது கெஞ்சியதாக கூறியுள்ள ஜெயஸ்ரீ, தனது இந்த நிலைக்கு மகாலட்சுமியும் ஒரு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மகாலட்சுமியுடன் தான் ஒன்றரை மணி நேரம் பேசியதை செல்போன் மூலம் ஒட்டுக்கேட்ட ஈஸ்வர், பின்னர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஈஸ்வரின் ஆசை
மேலும் ஈஸ்வரை தான் பெரிதும் நம்பியதாகவும், ஆனால் அவர் முன்பிருந்தே பெண்கள் விஷயத்தில் தவறானவர் என்பது தெரியவந்திருப்பதாகவும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். மகாலட்சுமி ஈஸ்வரிடம் நட்பாக பழகுவதாகவே கூறி வருவதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்ய ஈஸ்வர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.