Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கணவருடன் கடைசியாக பண்ணிய பார்ட்டி.. மந்திரா பேடி உருக்கமாக ஷேர் செய்த போட்டோ!
மும்பை: நடிகை மந்திரா பேடி தனது கணவருடன் கடைசியாக பார்ட்டி பண்ணிய போட்டோவை உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த போதும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராகவும் இருந்தார்.
அவ்வளவு காதல்.. மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து கணவனின் உடலை தூக்கிச் சுமந்த மந்திரா பேடி
மன்மதன்
இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
வெப் தொடர்
கடந்த ஆண்டு வெளியான 'சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. அவ்வப்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வருகிறார் மந்த்ரா பேடி.
பெண் குழந்தையை தத்தெடுத்து
மந்திரா பேடி பிரபல இயக்குநரான ராஜ் கவுஷலை கடந்த 1999ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்க கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.
கணவர் திடீர் மரணம்
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மாரடைப்பால் மரணமடைந்தார். காதல் கணவரின் மரணத்தால் நிலைகுலைந்து போனார் நடிகை மந்திரா பேடி.
கணவருடன் கடைசி போட்டோ
அவரது கணவரின் உடலை சுமந்து சென்றார். மேலும் மகன் செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகள் அனைத்தையும் தானே செய்து முடித்தார் மந்திரா பேடி. இந்நிலையில் தனது கணவருடன் நடிகை மந்த்ரா பேடி கடைசியாக பார்ட்டி கொண்டாடிய போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ
அதில் இருவரும் சரக்குடன் உள்ள கிளாஸை கையில் வைத்துள்ளனர். தனது கணவர் மீது சாய்ந்தப்படி போஸ் கொடுத்துள்ளார் மந்திரா. இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மந்திரா பேடி.
குவியும் லைக்ஸ்
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மந்திரா பேடிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் தங்களின் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். மந்திரா பேடி ஷேர் செய்துள்ள இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.