நடிகை மஞ்சிமாவும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கிட்டாங்க
சென்னை : மஞ்சிமா மோகன் தனது கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.
அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும்படியான கேரக்டர் மஞ்சிமாவிற்கு அமையவில்லை.
சிறப்பான கேரக்டருக்காக தான் காத்திருப்பதாக நடிகை மஞ்சிமா தெரிவித்துள்ளார்.

கலியூஞ்சல் படத்தில் அறிமுகம்
அச்சம் என்பது மடமையடா படத்தின்மூலம் கடந்த 2016ல் தமிழ் திரையுலகில் அறிமுகமான மஞ்சிமா மோகன், அதன் பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கடந்த 1997ல் கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமாகியவர்.

முதல் டோஸ்
அதன்பிறகு கடந்த 2015ல் நிவின் பாலி நடித்த ஒரு வடக்கன் செல்ஃபீ திரைப்படத்தின் நாயகியாக நடித்து பிரபலமானவர் மஞ்சிமாக மோகன். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள இந்த காலத்தில் இவர் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை இன்றைய தினம் போட்டுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள்
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தின்மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் அனைவரும் தடுப்பூசிகளை தாங்களே முன்வந்து போட்டு வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் தங்களது தடுப்பூசியின் முதல் டோசை போட்டு வருகின்றனர்.
Recommended Video

தடுப்பூசி முதல் டோஸ்
இதையொட்டியே மஞ்சிமா மோகனும் தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார். மேலும் அதன் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளதன்மூலம் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவருடைய ரசிகர்களும் தடுப்பூசியை ஆர்வத்துடன் போடும் சூழல் ஏற்படும்.


Click it and Unblock the Notifications











