நான் விரும்பும் ஆண்… உண்மையை போட்டுடைத்த மஞ்சிமா மோகன் !
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் மஞ்சிமா மோகன்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
நான் விரும்பும் ஆண் எப்படி பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ரசிர்களுக்கு கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக
குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கிய மஞ்சிமா மோகன், மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்ஃபி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சிம்புக்கு ஜோடியாக
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வசூலை பெற்றாலும் சிம்பு மற்றும் மஞ்சிமா மோகனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும் , இப்படத்தில் இடம் பெற்ற தள்ளிப்போகாதே பாடல் அனைவரின் விருப்பப்பாடலாக மாறியது.

கைவசம் பல படங்கள்
இந்த திரைப்படத்தை அடுத்து தமிழில் சத்ரியன்,இப்படை வெல்லும், ஜீவாவுடன் களத்தில் சந்திப்போம் திரைப்படத்திலும், விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், ஜம் ஜம் என்ற மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

வாய் பிளந்த ரசிகர்கள்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்தார். தற்போது, அவர் நான் விரும்பும் ஆண் எப்படி பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ரசிர்களுக்கு கூறியுள்ளார்.

நான் விரும்பும் நபர்
சர்வதேச சாக்லெட் தினத்தை முன்னிட்டு சாக்லெட் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாஞ்சிமா, இந்த சுவையான சாக்லேட் பிஸ்கட் புட்டிங்கை நான் பார்த்துக்கொள்வதை போல, என்னைப் பார்க்கும் ஒரு மனிதனை நான் விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அது சரி என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











