Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர்
சென்னை: ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை மஞ்சு வாரியார் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டதாக அவரது சகோதரர் தகவல் வெளியிட்டதை அடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய மீட்புக் குழுவினர் மஞ்சு வாரியரையும் மற்றவர்களையும் பத்திரமாக மீட்டனர்.
இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைப்பெற்றது.
தற்சமயம் அங்கு சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதனால் திரைப்பட குழுவினர் 30 பேர் மற்றும் அந்த கிராமத்து மக்கள் மழையால் தவிக்கிறார்கள்.
கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை
வெள்ளத்தில் மஞ்சுவாரியார்
நடிகை மஞ்சு வாரியர், இது பற்றி அவரது சகோதரர் மது வாரியரிடம் சேட்டிலைட் போன் மூலம் பேசியுள்ளனர். அவர்கள் அங்கு சிக்கி உள்ளது தெரிய வந்தது. நடிகை மஞ்சு வாரியர் பேசும் பொது, கடும் மழையால் அந்த கிராமத்தில் திரைப்பட குழுவினர் 30 பேர் உள்பட சுமார் 200 பேர் வரை கடுமையாக சிக்கிக்கொண்டு தவித்து வருகிறோம். எங்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மஞ்சுவாரியாருக்கு உணவு
இதனையடுத்து, நடிகை மஞ்சு வாரியரின் சகோதரர் மது வாரியர், மழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள தன்னுடைய சகோதரி மஞ்சு வாரியார் மற்றும் அவர்களுடன் சேர்ந்து சிக்கிக் கொண்டவர்களுக்கும் உணவும் பிற அத்தியாவசிய பொருட்களும் கொடுக்க வேண்டும் என்று ஹிமாச்சல் பிரதேச அரசிடம் கேட்டுக் கொண்டார்.
மஞ்சுவாரியார் மீட்பு
இதனை அடுத்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டுள்ள அவர்களை மீட்பதற்கு உடனடி நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது. மீட்புப் படையினர் உடனடியாக களத்திற்கு சென்று நேற்று திரைப்படக் குழுவினர் மற்றும் கிராமத்து மக்களை மீட்டனர். இந்த தகவலை ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தகவல் தெரிவித்தார்.
கடும் மழை
ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா போன்ற வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இமாசல பிரதேசத்தில் மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
மழை வெள்ளம்
இயக்குனர் சணல் குமார் சசிதரன் இயக்கும் மலையாள திரைப்பட படப்பிடிப்பு ஹிமாச்சல் பிரதேசம் மணாலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரா என்ற அழகிய குக்கிராமத்தில் கடந்த இரண்டு வரமாக நடைபெற்றது. இந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மஞ்சுவாரியாரும் படப்பிடிப்பு குழுவினரும் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.