Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை உட்கொண்ட மனோரமாவின் மகன்.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகி மற்றும் குணச்சித்திர நடிகையாக கோலோச்சியவர் நடிகை மனோரமா. மேடை நாடக கலைஞராக தனது கேரியரை தொடங்கினார் மனோரமா.
நடிகை 1500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1000 படங்களுக்கு மேல் நடித்ததால் 1985ஆம் ஆண்டே கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்தார் மனோரமா.
23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ!
நடிகர்கள்
தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் குவித்திருக்கிறார் மனோரமா. சினிமாத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சந்திரபாபு, நாகேஷ், சோ ராமசாமி முதல் செந்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார் மனோரமா.
மரணம்
சிவாஜி, எம்ஜிஆர் உட்பட ரஜினி, கமல், விஜயகாந்த், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனுன், அம்மா மற்றும் பாட்டி கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார். திரைத்துறையினரால் ஆச்சி என்ற அழைக்கப்பட்ட மனோரமா கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உடல் நலக்குறைவால் தனது 78 வயதில் காலமானார்.
பூபதிக்கு உடல்நலக்குறைவு
மனோரம்மாவுக்கு பூபதி என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூபதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிக தூக்க மாத்திரைகள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மது கிடைக்காததால் பூபதி போதைக்காக அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.