Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என்னது அதுக்குள்ள 44 வருஷம் ஆயிடுச்சா.. ராதிகாவை வாழ்த்திய மீனா.. எதுக்குன்னு தெரியுமா!
சென்னை : நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில்தான் முதன்முறையாக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக சுதாகரை காதலிக்கும் இளம்பெண் கேரக்டரில் நடித்திருந்தார்.
கடந்த 1978ல் வெளியான இந்தப் படம் அவருக்கு மிகச்சிறந்தப் பாராட்டுக்களையும் தொடர்ந்து படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
மல்டிபிளக்ஸில் புறக்கணிக்கப்படும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்: குரல் கொடுத்த கே.பாக்யராஜ்
நடிகை ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார், எம்ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற என அவர் மிகுந்த மெனக்கெட வேண்டியிருந்தது. பல போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
கிழக்கே போகும் ரயில் படம்
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தில் பாஞ்சாலியாக இளம் கிராமத்து பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்திருந்தார் ராதிகா. இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு தமிழ்கூட அதிகமாக தெரியாது. அந்தவகையில் இந்தப் படத்தின் பாஞ்சாலி கேரக்டரை உள்வாங்கிக்கொண்டு அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறப்பான படங்கள்
தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராதிகா. இவரது நடிப்பில் வெளியான கிழக்குச் சீமையிலே, கேளடி கண்மணி உள்ளிட்ட படங்கள் இவரது கேரியரில் பெஸ்டாக அமைந்தன. போல்டான கேரக்டர்களில் இவர் மிகச் சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
தயாரிப்பு நிறுவனம்
இதுமட்டுமில்லாமல், தன்னுடைய ராடன் மீடியா தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறார். சித்தி, அண்ணாமலை, அரசி, செல்வி என ஏராளமான சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பியுள்ளார். இந்தத் தொடர்களில் பிரதான கேரக்டர்களில் இவர் நடித்தும் உள்ளார்.
சிறப்பான சீரியல்கள்
குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான சித்தி, சித்தி 2 போன்ற சீரியல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல்கள். தற்போது கலைஞர் டிவியின் பொன்னி c/o ராணி என்ற தொடரை வெளியிட்டு வருகிறார். இந்தத் தொடரும் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
44 ஆண்டுகள் திரைப்பயணம்
இந்நிலையில், இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்து தற்போது 44 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இன்றைய தினம் ராதிகா தன்னுடைய பிறந்தநாளையும் கொண்டாடி வருகிறார்.
ராதிகா பிறந்தநாள்
ராதிகாவின் பிறந்தநாளையொட்டி நடிகை மீனா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராதிகாவின் பிறந்தநாள் மற்றும் அவர் திரையுலகில் கால்பதித்து 44 ஆண்டுகள் கடந்தது இரண்டையும் குறிப்பிட்டு மீனா வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்பட தொகுப்பு
இதையொட்டி ராதிகாவின் அழகான புகைப்படங்களின் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் ராதிகாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர அவர் மறக்கவில்லை. இதை தொடர்ந்து மீனாவின் இந்த வாழ்த்திற்கு ராதிகாவும் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.