Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னை குத்திட்டு எடுத்துட்டுப்போ.. போலீஸிடம் வாக்குவாதம்.. கதறி அழும் மீரா மிதுன்.. பகீர் வீடியோ!
சென்னை: நடிகை மீரா மிதுன் கைதாவதற்கு முன்பு போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா பிரபலங்களையும் அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
படப்பிடிப்பில் தவறி விழுந்த இயக்குநர் சேரன்.. தலையில் பலத்த காயம்.. 8 தையல் போடப்பட்டுள்ளதாக தகவல்!
இந்நிலையில் கடந்த வாரம் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுன், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசினார்.
மீரா மிதுன் சாதி வெறி பேச்சு
பட்டியலினத்தவர்கள் அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என்றும் அதனால் தான் அவர்களை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்றும் கூறினார். மேலும் தமிழ் சினிமாவில் உள்ள பட்டியலின இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும் என்றும் சாதி வெறியுடன் பேசினார் மீரா மிதுன்.
விசிக கமிஷனர் அலுவலகத்தில் புகார்
அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன்
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த புகாரில் நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன்
ஆனால் மீரா மிதுன் நேரில் ஆஜராக வில்லை. மாறாக என்னை கைது செய்வது என்பது கனவில்தான் நடக்கும் என போலீசாருக்கே சவால் விடும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீஸை பார்த்ததும் கதறியழுத மீரா மிதுன்
கேரளாவில் மீரா மிதுன் இருந்த ஹோட்டல் அறைக்குள் போலீசார் சென்றதும் கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்தார் மீரா மிதுன். மேலும் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக தனது போனில் வீடியோ கதறல் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
ஒரு பொண்ணுக்கு இப்படியெல்லாம் நடக்குமா?
அதில், மூச்சு வாங்க வாங்க பதற்றத்துடன் ஆரம்பிக்கும் மீரா மிதுன், இந்த ஆம்பளைங்க எல்லாரும் என்ன துன்புறுத்த ட்ரை பண்றாங்க. இவனுங்க எல்லாரும் என்ன டார்ச்சர் பண்றாங்க என்று கூறும் மீரா மிதுன், முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படியெல்லாம் நடக்குமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாவே இப்படியெல்லாம் நடக்கணுமா? என கேட்டு கதறி அழுகிறார்.
போலீஸ் என்றால் அட்ராசிட்டி பண்ணுவீங்களா?
கதறியபடியே ஒரு சக்ஸஸ்ஃபுல்லான பொண்ணுக்கு எதுவுமே கிடையாதா? எல்லாரையும் வெளியே போகச் சொல்லுங்கள் என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் மீரா மிதுன். பின்னர் கேமரா வேறு எங்கேயோ ஃபோகஸ் செய்ய போலீஸ் என்றால் அட்ராசிட்டி பண்ணுவீங்களா என கடுமையாக வாக்குவாதம் செய்கிறார்.
இங்கேயே குத்திக் கொண்டு செத்துவிடுவேன்
மேலும் என் போனை தர முடியாது என்று கத்தும் மீரா மிதுன், கத்தியை எடுத்து என்னை குத்திட்டு என்னை இங்கிருந்து எடுத்துட்டு போங்க என கதறுகிறார். நான் இங்கேயே செத்துப் போறேன். போலீஸ் என்னை இங்கேருந்து எடுத்துட்டுப்போனால் நான் இங்கேயே குத்திக்கொண்டு செத்துவிடுவேன் என மிரட்டுகிறார்.
ஒரு கை மேல பட்டாலும்
ஒரு கை என் மேல பட்டாலும் நான் என்னையே கத்தியால் குத்திக்கொண்டு செத்துவிடுவேன் என மிரட்டுகிறார் மீரா மிதுன். மேலும் தமிழ் நாடு போலீஸ் தன்னை ரொம்பவே டார்ச்சர் பண்ணுவதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு கூறியுள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.