Don't Miss!
- News இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
பிரஸ் மீட்டுக்கு முன்பாக மவுன அஞ்சலி செலுத்திய மீரா மிதுன்.. யாருக்குன்னு பாருங்க!
சென்னை: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை மீரா மிதுன் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பிரஸ் மீட்டை தொடங்கினார்.
அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டதால் கடுப்பான நடிகை மீரா மிதுன் இனி தமிழ் சினிமாவே வேண்டாம் எனக்கூறி மும்பை சென்றார். பாலிவுட் படங்களில் நடிப்பதாக கூறிய அவர் இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.
தற்போது தமிழகம் வந்துள்ள அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு கொடுக்க வேண்டிய பேமென்டில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
|
சுஜித்துக்கு அஞ்சலி
முன்னதாக பிரஸ் மீட்டை தொடங்கும் முன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்காக மவுன அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா மிதுன், சுஜித்தை தான் மிஸ் செய்துவிட்டதாகவும், இப்போது என்னுடைய கடவுள்களில் நீயும் ஒருவர் என தெரிவித்திருக்கிறார்.
அரசியலுக்கு வருவது உறுதி
தொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவது உறுதி, எந்தக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்பது குறித்து இப்போது பேசவில்லை என்றார்.
விளாசல்
குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, மீட்புப்பணிகள் நடைபெற்றபோது தமிழக அரசை கடுமையாக சாடினார் மீரா மிதுன். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு தமிழக அரசை விமர்சித்த அவரை நெட்டிசன்கள் விளாசினர்.
|
அதிமுக பிரமுகர்கள்
ஆனால் நடிகர் சரவணன் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மீரா மிதுன், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏகள் மற்றும் அக்கட்சியின் பிரமுகர்களை சந்தித்து வணக்கம் கூறினார்.
திட்டவட்டம்
இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில வெளியிட்டிருந்தார் மீராமிதுன். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.