Don't Miss!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போலீஸ்காரர் முன்பே குண்டர்கள் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்!
கொச்சி: குண்டர்கள் தன்னை திடீரென்று தாக்கியதாக பிரபல நடிகை ஒருவர் போலீசில் புகார்
கொடுத்துள்ளார்.
பிரபல நடிகை மினு முனீர். இவர் தமிழில் புல்லுக்கட்டு முத்தம்மா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது விஜய்யின் பிரமாண்ட 'மாஸ்டர்..' திருப்பூர் சுப்ரமணியம் உறுதி!
கேரளாவில் வசித்து வரும் இவர், முனீர் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
மினு முனீர் ஆனார்
இதனால் அவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மினுவின் கணவர் முனீர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மினு குரியன் என்ற தனது பெயரை மினு முனீர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவர் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
நெடும்பச்சேரி போலீஸ்
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வரும் முனீர் நேற்று நெடும்பச்சேரி
போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனது பிளாட்டில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது வாகனத்தை அங்கு நிறுத்தக் கூடாது என்றனர்.
சரமாரி தாக்கினர்
ஏன் நிறுத்த கூடாது என்று கேட்டதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அவர்கள் போலீசார் முன்பே, என்னை சரமாரியாகத் தாக்கினர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என்னை தாக்கிய குண்டர்களை போலீசார் காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
போலீசார் விசாரணை
இந்தப் புகார் பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஒருவர் தன்னைக் குண்டர்கள் தாக்கியதாகக் கொடுத்துள்ள புகார், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.