இந்த ஒரு காரணத்துக்காகதான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. மனம் திறந்த சீரியல் நடிகை!
சென்னை: இரண்டாவது திருமணம் செய்துகொண்டது ஏன் என்பது குறித்து நடிகை நந்தினி தெரிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக வலம் வந்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் நந்தினி. இந்த கேரக்டர் பிரபலமாக நந்தினிக்கு முன்பு மைனாவும் ஒட்டிக்கொண்டது.
இந்நிலையில் மதுரையை பூர்விகமாக கொண்ட மைனா, கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

தற்கொலை
அப்போது திடீரென நந்தினியின் கணவர் கார்த்திகேயேன் லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நந்தினியும் அவரது தந்தையும்தான் காரணம் என கார்த்திகேயனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

சீரியல் நடிகருடன்..
இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நடிகை நந்தினி கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். யோகேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார் நந்தினி.

டிக்டாக் வீடியோஸ்
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து நடிகை நந்தினி தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் டிக்டாக் வீடியோவும் வெளியாகி தீயாய் பரவியது.

நண்பரான யோகேஷ்
இந்நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ஏன் என நடிகை நந்தினி மனம் திறந்து பேசியிருக்கிறார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்தபோது தனது நண்பரான யோகேஷ் உறுதுணையாக இருந்துள்ளார்.

பெண் கேட்ட பெற்றோர்
இதனை தொடர்ந்து யோகேஷும் நந்தினியும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் யோகேஷின் குடும்பத்தினர் நந்தினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.

இழக்கக்கூடாது
அப்போது இரண்டாவது திருமணம் என்பதால் நந்தினியும் அவரது பெற்றோரும் யோசித்தனராம். ஆனால் யோகேஷ் கொடுத்த நம்பிக்கை மற்றும் அவரது குணநலன்கள் பிடித்துப்போக, இப்படி ஒருத்தரை வாழ்க்கையில் இழக்கக்கூடாது என திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாராம் நந்தினி.

நிலைத்து நிற்கனும்
நல்ல புரிதல் உள்ள இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம் நந்தினி.


Click it and Unblock the Notifications











