Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காதலனுடன் கோவில் கோவிலாக சுற்றும் லேடி சூப்பர் ஸ்டார்.. நேத்து எந்த கோயில்ன்னு பாருங்க!
சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நேற்றும் ஒரு கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
நடிகை நாயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இது ஊரறிந்த விஷயம்.
வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று வரும் இவர்கள் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்வதாக தகவல் பரவியது. அதேநேரத்தில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எப்போது திருமணம்?
இதுதொடர்பாக இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேநேரத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எப்போது ஊர் அறிய திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
காதலருடன் தரிசனம்
இந்நிலையில் நயன்தாரா தனது காதலருடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். அண்மையில் திருப்பதியில் தனது காதலருடன் சாமி தரிசனம் செய்தார் நயன்தார.
கோவில்களில் வழிபாடு
அதனை தொடர்ந்து மூக்குத்தியம்மன் படப்பிடிப்புக்காக கன்னியாகுமரி சென்ற அவர் பகவதி அம்மன் கோவிலில் தனது காதலருடன் வழிபாடு நடத்தினார். பின்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் விக்னேஷ் சிவனுடன் வழிபட்டார் நயன்தாரா.
நடை மூடல்
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது.
மஞ்சள் நிற சுடிதார்
இதையடுத்து நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் நிற சுடிதாரில் நயன்தாரா பக்தி பரவசத்துடன் நயன்தாரா பங்கேற்றார்.
செல்பி எடுக்க முயற்சி
நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த காவலர்கள் ரசிகர்கள் யாரும் நெருங்காதவாறு தடுத்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
மனக்கசப்பால்
நயன்தாராவின் வருகையால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனாலேயே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்கிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!