Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
கண்ணூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை மரணமடைந்தார்.
கொரோனா காரணமாக உலக நாடுகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
கொஞ்சம் கட்டுப்பாடு
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் பயம் போகவில்லை.
நடிகையின் தந்தை
பாதிக்கப்படுவோடும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்த கொரோனா தொற்றுக்கு பிரபல நடிகையின் தந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல மலையாள நடிகை நிகிதா விமல். இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
கிடாரி நாயகி
தமிழில், சசிகுமார், பிரபு நடித்த, வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், கார்த்தியின் தம்பி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது சிபிராஜ் ஜோடியாக ரங்கா என்ற படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தந்தை பவித்ரன்.
திடீர் மாரடைப்பு
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61.
நிகிலா, அகிலா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய துணை செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் இருந்தவர், பவித்ரன். அவர் மறைவை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. மறைந்த பவித்ரனுக்கு விமலாதேவி என்ற மனைவியும் நடிகை நிகிலா, அகிலா ஆகிய மகள்களும் உள்ளனர்.