Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பூரம் திருவிழாவிற்கு நோ சொல்லுங்க...கேரள மக்களிடம் நடிகை பார்வதி வலியுறுத்தல்
திருச்சூர் : புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை, வழக்கம் போல் இந்த ஆண்டும் நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வரும் இந்த சமயத்தில் பூரம் திருவிழாவை நடத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய விவேக் தீயாய் பரவும் வீடியோ!
இந்நிலையில் நடிகை பார்வதியும், ஆன்லைனில் மக்களை ஒன்று திரட்டி பூரம் திருவிழாவை நடத்துவதற்கு எதிராக போராடி வருகிறார். பூரம் திருவிழா வேண்டாம் என கூறுங்கள் என கேரள மக்களை அவர் தனது சமூக வலைதளங்கள் வழியாக கேட்டு வருகிறார்.
தலைமை செயலாளருக்கு கடிதம்
பூரம் திருவிழாவை நிறுத்தக்கோரி தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் குறைந்தபட்ச மனிதநேயத்தை கடைபிடியுங்கள் என கேட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்காவது கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் இது தேவையா
ஆனால் பூரம் திருவிழா, ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடும் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாகவே கேரள மாநிலம் வெள்ளம், கொரோனா ஆகியவற்றை எதிர்த்து போராடி வருகிறது. இந்த சூழலில் பூரம் திருவிழாவை நடத்தினால் அது கேரளாவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு பொது மக்களுக்கு அனுமதியில்லாமல் பூரம் திருவிழா நடத்தப்பட்டதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் தலைமை செயலாளருக்கு எழுதி உள்ள கடிதத்தில் அந்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பூரம் யாருடைய திருவிழா
மேலும் அந்த பத்திரிக்கையாளர் தனது பதிவில், பூரம் யாருடைய திருவிழா? அது ஆண்களின் திருவிழா. பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்கள் இதில் பங்கேற்கின்றன. பூரம் திருவிழா களத்தில் வைரசை பெறும் ஆண்கள், பிறகு வீட்டிற்கு செல்வதால் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கும் பரவும் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
பூரத்திற்கு நோ சொல்லுங்க
அவரின் இந்த பதிவிற்கு பார்வதி கருத்து பதிவிட்டுள்ளார். அத்துடன் பூரம் திருவிழாவை நடத்துவதற்கு எதிராக ஆன்லைன் போராட்ட இயக்கம் ஒன்றை துவக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பரவும் சமயத்தில் மக்கள் நலனுக்காக போராடும் அந்த பத்திரிக்கையாளரையும் பார்வதி பாராட்டி உள்ளார்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
செருப்பாய் தேய்ந்த பிரித்விராஜ்.. மாஸ் காட்டும் ஆடு ஜீவிதம்.. மகிழ்ச்சியில் படக்குழு!
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!