சட்டையை கழட்டி போட்டு..கையை மேலதூக்கி காத்துவாங்கும்..பார்வதி நாயர்!
சென்னை : இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடித்து வருகிறார் நடிகை பார்வதி நாயர்
தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் ஆர்வமாகவும், உற்சாகத்திலும் இருக்கிறார் இவர்.
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.
உன் பார்வையில்
அழகு தேவதை நடிகையான பார்வதி நாயர் இறுதியாக உன் பார்வையில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் கபீர் லால் உருவாகி உள்ள இப்படத்தில் இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்வதிநாயர்.

வித்தியாசமான
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

ஒரு ரவுண்ட்
அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

ஸ்டைலிஸ் லுக்
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகின்றன. தற்போது இவர், மேல் சட்டையை கழட்டி போட்டும், கைகளை தலைக்கு மேல் உயர்த்தியும் ஒரு ஸ்டைலிஸ் லுக் விட்டுள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











