Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்து.. அஜித் பட நடிகைக்கு பலத்த காயம்.. அப்செட்டில் படக்குழு!
சென்னை: படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தால் நடிகை பார்வதி நாயர் கைகளில் பலமாக அடிபட்டுள்ளது.
தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.
தொடர்ந்து, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், என்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அஜித் பட நடிகை
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதாரு அதாரு பாடலே அருண் விஜய் மற்றும் பார்வதி நாயர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின் போது விபத்து
பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக உன் பார்வையில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி நாயர். அந்த படத்தின் படப்பிடிப்பில் தான் எதிர்பாரா விதமாக பார்வதி நாயருக்கு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கையில் காயம்
பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கபிர் லால் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். உன் பார்வையில் படத்தில் சகோதரியை கொன்றவர்களை பழிவாங்கும் பார்வையற்ற பெண்ணாக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பார்வதி நாயருக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக கையில் பலத்த காயம் உண்டாகி உள்ளது. ரத்தம் வடிய பார்வதி நாயர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
படு கிளாமராக
ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு இளைஞர்களை கவர்ந்துள்ளார். சாக்ஷி அகர்வாலும், பார்வதி நாயரும் சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி ஃபேஷன் ஷோவிலும் நடுவர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?