Don't Miss!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
அண்மையில் விவாகரத்தான நடிகை ஹோட்டலில் பிணமாகக் கண்டுபிடிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாயல் சக்ரபர்த்தி(38). பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான காக்பிட் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேலோ படம் வரும் 18ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சந்தேகம்
பாயல் சிலிகுரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று காலை அவர் கேங்டாக் கிளம்ப வேண்டியிருந்தது. அவர் தங்கியிருந்த அறையின் கதவை ஹோட்டல் ஊழியர்கள் பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பாயல்
போலீசார் வந்து ஹோட்டல் அறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது பாயல் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாயலின் இந்த செயலால் பெங்காலி திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகன்
பாயலுக்கு மகன் உள்ளார். அண்மையில் தான் பாயலுக்கு விவாகரத்து ஆனது. பாயலின் தற்கொலை குறித்த தகவல் அறிந்த அவரின் குடும்பத்தார் சிலிகுரிக்கு விரைந்து வந்தனர். அவர் எதற்காக சிலிகுரிக்கு வந்தார் என்பது அவர்களுக்கே தெரியவில்லை. ராஞ்சிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சிலிகுரிக்கு ஏன் வந்தார் என தெரியவில்லை என்று பாயலின் தந்தை பிரபிர் குப்தா தெரிவித்துள்ளார்.
பேட்டி
பாயல் தங்கியிருந்த ஹோட்டலில் பணியாற்றும் அருண் தேப் கூறுயதாவது, நான் புதன்கிழமை காலை கேங்டாக் செல்கிறேன் என்றார். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அறையை உள்புறமாக தாழிட்ட அவர் இரவு உணவை கூட ஆர்டர் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.