Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆயிடுச்சு.. இன்னும் ரிசல்ட் வரல.. கொரோனாவுக்கு அண்ணனை இழந்த நடிகை புகார்!
சென்னை: தனது சகோதரர் இறப்பை தொடர்ந்து தங்களின் குடும்பத்தினர் எடுத்த கொரோனா டெஸ்ட்டுக்கான ரிசல்ட் ஒரு வாரம் ஆகியும் இன்னும் வரவில்லை என நடிகை பியா பாஜ்பீ குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலுக்கி வருகிறது.
ஆண் நண்பருடன் லாக்டவுனை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்.. ஓப்பனாக ஸ்டேட்மென்ட் வெளியிட்டு அலப்பறை!
தென் மாநிலங்களை காட்டிலும் வடமாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
தலைநகர் டெல்லி
பல மாநிலங்களில் மருத்துவமனை படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புக்ள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. மேலும் தலைநகர் டெல்லியிலும் இதே நிலையில்தான் இருக்கிறது.
நடிகை சகோதரர் மரணம்
கடந்த வாரம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த நடிகை பியா கொரோனாவால் பாதித்துள்ள தனது சகோதரருக்கு உதவ வேண்டும் என ட்விட்டரில் உதவி கேட்டிருந்தார். அவருக்கு உதவி கிடைக்காத நிலையில் ஐந்து மணி நேரத்திலேயே அவரின் சகோதரர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்னும் ரிப்போர்ட் வரவில்லை
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 7ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை எனத் தெரிகிறது.
ஒரு வாரம் ஆகிவிட்டது
இதனை நடிகை பியா பாஜ்பீ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது மே 7ஆம் தேதி என்னுடைய மொத்த குடும்பம் கொரோனா சோதனை செய்தது.. இன்று 13 தேதியாகிவிட்டது. இதுவரை ரிப்போர்ட்டும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. பின் ட்ராப் சைலன்ஸாக உள்ளது. கடவுள் அருளால் என் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.