Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'குடியை விட முடியாமல் தவித்தேன்.. தற்கொலைக்கு முயன்றேன்'.. அஜித் பட நாயகியின் ஷாக் ரிப்போர்ட்!
மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, தற்கொலைக்கு முயற்சித்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: தீராத மன அழுத்தத்தினால் மதுப்பழக்கத்துக்கு அடிகையாகி, தற்கொலைக்கு முயன்றதாக நடிகை பூஜா பட் கூறியுள்ளார்.
அஜித், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 'கல்லூரி வாசல்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா பட். இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் உறவினர் ஆவார்.
மகேஷ் பட் - சோனி ரஸ்சான் தம்பதியின் மூத்த மகளும், நடிகை ஆலியா பட்டின் அக்காவுமான ஷாஹீன் பட் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட போது தான் அடைந்த வேதனைகள் குறித்து அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்த விழாவில் மகேஷ் பட்டின் மொத்த குடும்பமும் பங்கேற்றது.
சுபாஸ்கரனின் வாழ்கையை படமாக்க தயாரகும் முன்னனி இயக்குனர்கள்
பூஜா பட்டின் ஷாக்
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை பூஜா பட், ஷாஹீனை போல் தானும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதன் காரணமாக தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும், ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இதுகுறித்து அவர் கூறியதாவது, " ஒருமுறை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நான் கோவாவில் இருந்தேன். அப்போது என்னை சுற்றி இருந்த எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் என்னால் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
மதுவுக்கு அடிமை
தீராத மன அழுத்தத்தால் வேதனைப்பட்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தேன். பீச்சில் உட்கார்ந்திருந்த போது, கடலுக்குள் இறங்கி அப்படியே போய்விடலாமா என தோன்றியது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனம் முழுவதும் இருந்தது.
மகேஷ் பட் ஆலோசனை
அப்போது மகேஷ் பட்டுக்கு போன் செய்து பேசினேன். அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அவர் தான் என்னை தேற்றி தற்கொலை செய்து கொள்ளாதபடி தடுத்தார்", என பூஜா பட் கூறினார்.
கதறி அழுத ஆலியா
இந்த விழாவில் தான் தனது அக்காவை நினைத்து நடிகை ஆலியா பட் கதறி அழுதார். அந்த வீடியோ சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.