Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'குடியை விட முடியாமல் தவித்தேன்.. தற்கொலைக்கு முயன்றேன்'.. அஜித் பட நாயகியின் ஷாக் ரிப்போர்ட்!
மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, தற்கொலைக்கு முயற்சித்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மும்பை: தீராத மன அழுத்தத்தினால் மதுப்பழக்கத்துக்கு அடிகையாகி, தற்கொலைக்கு முயன்றதாக நடிகை பூஜா பட் கூறியுள்ளார்.
அஜித், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 'கல்லூரி வாசல்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா பட். இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் உறவினர் ஆவார்.
மகேஷ் பட் - சோனி ரஸ்சான் தம்பதியின் மூத்த மகளும், நடிகை ஆலியா பட்டின் அக்காவுமான ஷாஹீன் பட் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட போது தான் அடைந்த வேதனைகள் குறித்து அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்த விழாவில் மகேஷ் பட்டின் மொத்த குடும்பமும் பங்கேற்றது.
சுபாஸ்கரனின் வாழ்கையை படமாக்க தயாரகும் முன்னனி இயக்குனர்கள்
பூஜா பட்டின் ஷாக்
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை பூஜா பட், ஷாஹீனை போல் தானும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதன் காரணமாக தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும், ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இதுகுறித்து அவர் கூறியதாவது, " ஒருமுறை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நான் கோவாவில் இருந்தேன். அப்போது என்னை சுற்றி இருந்த எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் என்னால் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
மதுவுக்கு அடிமை
தீராத மன அழுத்தத்தால் வேதனைப்பட்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தேன். பீச்சில் உட்கார்ந்திருந்த போது, கடலுக்குள் இறங்கி அப்படியே போய்விடலாமா என தோன்றியது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனம் முழுவதும் இருந்தது.
மகேஷ் பட் ஆலோசனை
அப்போது மகேஷ் பட்டுக்கு போன் செய்து பேசினேன். அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அவர் தான் என்னை தேற்றி தற்கொலை செய்து கொள்ளாதபடி தடுத்தார்", என பூஜா பட் கூறினார்.
கதறி அழுத ஆலியா
இந்த விழாவில் தான் தனது அக்காவை நினைத்து நடிகை ஆலியா பட் கதறி அழுதார். அந்த வீடியோ சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.