Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஏம்மா பூனம்.. இப்படியெல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்போ அவர் மேல புகார் கொடுத்தா என்ன அர்த்தம்?
சென்னை: பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் குறித்து ஷேர் செய்திருக்கும் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள், அவரது புகாரில் நம்பிக்கையில்லை என கூறியுள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
போதை பொருள் தொடர்பான வழக்கில் பிரபலங்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் பாலிவுட் சினிமாவை ஆட்டம் காண வைத்துள்ளது.
எல்லாம் பணம் பிடுங்க டிராமா..பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்..அதகளப்படும் டிவிட்டர்!
பாலிவுட் சர்ச்சை
மேலும் பாலிவுட் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டுகள், கங்கனா மீது பாலிவுட் பிரபலங்கள் சாடல் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தயாரிப்பாளர் சஜித் கான் ஆகியோர் மீதான பாலியல் புகார்கள் என பாலிவுட் சினிமா கடந்த சில மாதங்களாய் பேசு பொருளாகியுள்ளது.
போலீஸில் புகார்
அந்த வகையில் தற்போது, பூனம் பாண்டே விவகாரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களும் பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளனர். நடிகை பூனம் பாண்டே கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் தனது காதலரான சாம் பாம்பேவை திருமணம் செய்தார். ஆனால் ஹினிமூன் போன இடத்தில் ஏற்பட்ட தகராறில் கணவர் மீது பூனம் பாண்டே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கணவர் கைது
கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பூனம் பாண்டேவின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
வைரலாகும் பதிவுகள்
மேலும் நடிகை பூனம் பாண்டேவுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் கடைசியாக பகிர்ந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது சாம் பாம்பே பலாத்காரம் செய்தது போல் தெரியவில்லை என்றும் பதிவிட்டுள்ளனர்.
பெஸ்ட் ஹனிமூன்
ஹனிமூன் போன கையோடு அரைகுறை உடையில் கணவருடன் சேர்ந்து ஆபாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டார் பூனம் பாண்டே. அதில் பெஸ்ட் ஹனிமூனை கொண்டாடுவதாக குறிப்பிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நான் கேட்க வேண்டுமா?
அடுத்து கறுப்பு நிற டீப் ஓபன் க்ராப் டாப்ஸில் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்தார் பூனம் பாண்டே. அந்த போட்டோவுக்கு, என்னைக் கட்டிக்கொண்டு என்னுடன் விளையாடும்படி நான் அவரிடம் கேட்க வேண்டுமா? என ஏக்கத்துடன் கேப்ஷன் கொடுத்திருந்தார்.
ரொமான்ஸ் பொங்க
அதனை பார்த்த பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பே, உன்னை கட்டிக்கொள்ள வேண்டும் என்றால் நீ முதலில் என்னை அவிழ்த்துவிட வேண்டும் என்று பதில் கொடுத்திருந்தார். இப்படி இருவரும் சமூக வலைதளத்தில் ரொமான்ஸ் பொங்க டபுள் மீனிங்கில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆபாச சைகை
மேலும் அதே உடையில் படுக்கையில் படுத்தப்படி ஒரு வீடியோவை ஷேர் செய்திருந்தார் பூனம் பாண்டே. அதில் தனது கணவரான சாம் பாம்பேவுடன் பேசும் பூனம் பாண்டே, வாயை திறந்து ஆபாசமான சைகைகளை செய்தார். அந்த வீடியோவுக்கு தோற்றுப்போன மயக்கும் கலை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
திங்கள் கிழமை காலை
அவரது இந்த வீடியோவை மட்டும் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். பூனம் பாண்டே தற்போது தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ள நிலையில் அவரது இந்த பதிவுகள் வைரலாகி வருகிறது. பூனம் பாண்டே இந்த பதிவுகளை திங்கள் கிழமை காலை பதிவு செய்துள்ளார்.
உரிய விசாரணை
ஆனால் அன்றிரவே போலீஸில் புகார் அளித்துள்ளார் பூனம் பாண்டே. இவற்றை தற்போது பார்த்து வரும் நெட்டிசன்கள், சாம் பாம்பே பலாத்காரம் செய்ததாக தெரியவில்லை என கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் இப்படியெல்லம் பேசி விட்டு இப்போது புகார் அளித்தால் எப்படி, போலீசார் பூனம் பாண்டேவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.