Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெரிய இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல நடிகை பகீர் புகார்.. பரபரப்பில் திரையுலகம்!
சென்னை: பிரபல நடிகை பெரிய இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு வருமாறு அழைத்ததாக கூறியிருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை தொடர் கதையாக உள்ளது.
விவேக் நினைவாக மரங்கள் நட்ட ஆத்மிகா...வைரலாகும் ஃபோட்டோஸ்
பட வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களையும் நடிகைகளையும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
கிழிந்த முகத்திரை
அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களின் அனுபவங்களை #Metoo என்ற அமைப்பை உருவாக்கி புகார் அளித்து வந்தனர். இந்த மீடூ புகாரின் மூலம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்தது.
திரைத்துறைக்கு ஷாக்
ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் சிறை தண்டனையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தன்னுடைய மீடூ அனுபவத்தை பகிர்ந்து ஒட்டு மொத்த திரைத்துறைக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
ராக் ஆன்
அதாவது, பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி தேசாய். சின்னத்திரையில் இருந்து பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார் பிராச்சி தேசாய். 2008ஆம் ஆண்டு வெளியான ஃபர்ஹான் அக்தர்ஸின் ராக் ஆன் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.
காஸ்டிங் கோச்
தொடர்ந்து லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பாய், கார்பன் உள்பட பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிராச்சி தேசாய் தனக்கு ஏற்பட்ட காஸ்டிங் கோச் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
படுக்கைக்கு அழைத்தார்
அவர் கூறியிருப்பதாவது, ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார். படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன்.
விரும்பவில்லை என்று கூறியும்
நான் மறுத்த போதும் தொடர்ந்து என்னை அழைத்தார். நான் உங்கள் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிய போதும் கூட அவர் தொடர்ந்து அழைத்து கொண்டிருந்தார்.
ஒப்புக்கொள்ளவில்லை
அவருடன் படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ள வில்லை.
Recommended Video
இயக்குநர் யார்?
குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் இவ்வாறு பிராச்சி தேசாய் தெரிவித்துள்ளார். பிராச்சி தேசாயின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அந்த இயக்குநர் யார் என கேட்டு வருகின்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்