Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்... பிரியா ஆனந்த் பாராட்டு
கொச்சி : கேரளாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக உடனடியாக ரூ.3,00,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு நடிகை பிரியா ஆனந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெற்றோரை இழக்கும் குழந்தைகள்
கொரோனா ஏற்படுத்திவரும் பாதிப்பு சொல்லில் அடங்காதது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு தங்களுடைய சொந்தங்களை இழந்து வாடுபவர்கள் அதிகமாகி வருகின்றனர். கொரோனாவிற்கு ஒரே நேரத்தில் தங்களது பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளும் அதிகரித்து வருகிறது.
கேரளா அரசின் நலத்திட்டங்கள்
இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்கட்டமாக அவர்களுக்கு 3,00,000 ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கல்விச் செலவு
மேலும் அவர்களது 18ம் வயதுவரை மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவர்கள் பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலும் அவர்களது கல்வி செலவையும் கேரள அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புகள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பிரியா ஆனந்த் வரவேற்பு
இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை இணைத்து லவ் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார். இதேபோல இந்த அறிவிப்புக்களுக்கு திரைத்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.