கணவரின் நெஞ்சில் கையை வைத்து பிரியா ராமன்.. கட்டியணைத்த ரஞ்சித்.. வைரலாகும் ரொமான்டிக் போட்டோ!
சென்னை: நடிகை பிரியா ராமன் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
1990களில் பிரபல நடிகராக வலம் வந்தார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில்
தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்துள்ளார் ரஞ்சித். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ரஞ்சித்.

பிரியா ராமன்
ரஞ்சித் நடிகை பிரியா ராமனுடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

திருமணம்
இதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரியா ராமனும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பிஸியாக
ரஜினிகாந்தின் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பிரியா ராமன். நடிகர் ரஞ்சித்தும் பிரியா ராமனும் படங்களில் பிஸியாக இருந்தனர்.

விவாகரத்து
சூர்யவம்சம் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் பிரியா ராமன். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியா ராமனும் ரஞ்சித்தும் விவாகரத்து செய்து கொண்டனர்.

திருமண நாளில்
அதன்பிறகு இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் மீண்டும் இணைந்தனர். அவர்கள் இருவரும் தங்களின் திருமண நாளில் எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தனர்.

கணவரின் நெஞ்சில் கை
அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகை பிரியா ராமன் தனது கணவருடன் எடுத்த கலக்கல் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அணைத்த கணவர்
அதில் கணவரின் நெஞ்சில் கை வைத்தப்படி சாய்ந்துள்ளார்.
அவரை அவரது கணவரான நடிகர் ரஞ்சித் அணைத்துள்ளார்.
இதேபோல் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த மற்றொரு போட்டோவையும் நடிகை பிரியா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

குவியும் லைக்ஸ்
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதே மகிழ்ச்சி எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோக்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

கணவரின் சீரியலில் மனைவி
இதனிடையே ரஞ்சித் நடிக்கும் செந்தூரப் பூவே சீரியலில் நடிகை பிரியா ராமன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சேர்ந்திருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது செந்தூரப்பூவே சீரியலில் எடுத்ததா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











