Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வயசு ஆனதே தெரியல.. மீண்டும் தமிழ் பக்கம் வாங்க.. பிரியாமணிக்கு அழைப்பு
சென்னை : பிரியாமணியின் புது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முத்தழகு மீண்டும் தமிழ் பக்கம் வா என்று ரசிகர்கள் அழைத்துள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதே மாடலிங்கில் துழைந்து கலக்கியவர் தான் பிரியா மணி. அதன் பின்னரே இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கண்களால் கைது செய் இவருக்கு அறிமுகப்படம் என்றாலும் அதற்கு முன்பாகவே தெலுங்கு படம் ஒன்றில் படங்களில் நடித்து இருக்கிறார்.
அதன் பின்னர் தமிழில் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் நடித்தார் இப்படம் தான் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. பின்னர் இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் பெல்லைனா கொத்தாலு ஹிட் ஆக இவருக்கு வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதன் பின் தமிழில் இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் தமிழில் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் கார்த்தி அறிமுகமானார்.
இப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி.
தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியாமணி போட்டோஷுட் நடத்தியுள்ளர் அதன் புகைபடங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் முத்தழகு தமிழில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும், எவ்வளவு தான் வயசு ஆனாலும் கலக்கலா இருக்கீங்களே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்