என்ன செய்தாலும் ஒரு பயளும் கண்டுக்க மாட்டேங்குறான்னே: நடிகை கவலை
சென்னை: கையில் புதுப்படங்கள் இல்லாத நிலையில் நடிகை செய்த பப்ளிசிட்டி ஸ்டண்ட்டும் வேலை செய்யவில்லையாம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின் ஆனவர் அந்த நடிகை. கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் பக்கமும் சென்று வந்தார்.

அவரை கொண்டாடிய ரசிகர்களே தற்போது அவரை மறந்துவிட்டனர். தனது ஆஸ்தான இயக்குனரும் கைவிட்டுவிட்டார். நடிகையின் கையில் புதுப்படங்கள் எதுவும் இல்லை.
வெளிநாடுகளுக்கு டூர் போன நடிகை அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டார். சக நடிகை ஒருவரை விளாசி விமர்சித்தார்.
சான்ஸ் கிடைக்காத காண்டில் நடிகை சக நடிகையை விமர்சிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். நடிகை என்ன செய்தாலும் அவரை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இதனால் அவர் கவலையில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











