பைசூலுக்கு உதவுகிறார்... வேறு அதிகாரி விசாரிக்கணும்! - போலீசார் மீது நடிகை ராதா பரபரப்புப் புகார்!

By Shankar

Actress Radha complaints against police
சென்னை: என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார். எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என போலீஸ் மீது கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ராதா.

தயைரிப்பாளர் பைசூல் என்பவர் தன்னை செக்ஸ் மோசடி செய்துவிட்டார் என்று கூறி சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் கமிஷனரைச் சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீதே பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அப்போது, பைசூல் தன்னிடம் ரூ 50 லட்சம் மோசடி செய்ததற்கான ஆவணங்களைக் கொடுத்த ராதா, தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X